திருக்குறள்

1286.

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.

திருக்குறள் 1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.

பொருள்:

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

மு.வரததாசனார் உரை:

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.